புதன், 5 நவம்பர், 2014

உலக அமைதி வேண்டி பாத யாத்திரை

உலக அமைதி வேண்டி முருக பக்தர்கள்
திருத்தணிக்கு பாத யாத்திரை

சென்னை மாங்காட்டை அடுத்த கெருகம்பாக்கத்திலிருந்து முருக பக்தர்கள் 50 பேர் உலக அமைதி வேண்டி திருத்தணிக்கு பாதயாத்திரை சென்றனர். மாங்காடு சர்ப சித்தர் ஆதிஜீவ பீடம் மற்றும் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் கெருகம்பாக்கம் வள்ளி தேவயாணி சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலிலிருந்து கெருகம்பாக்கம், மவுலிவாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு, பூந்தமல்லி வழியாக திருத்தணிக்கு பாதயாத்திரை குழுவினர் நடந்து சென்றனர். இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் ஜி.டி. ரவிச்சந்திரன், பாதயாத்திரை குழு தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் சென்ற பாதயாத்திரை குழுவினரை வழிநெடுகிலும் முருக பக்தர்கள் வரவேற்றனர்.

pathayathirai itppp t.t.tv - YouTube