ஞாயிறு, 14 டிசம்பர், 2014

சித்தர் அடிகளார் ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு டாக்டர் பட்டம்


சென்னை மாங்காடு கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் சித்தர் அடிகளாரும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவனத் தலைவருமான ஆன்மிக குரு சிவஸ்ரீ. திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களுக்கு 13.12.14 அன்று ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Academy of universal global peace  சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்களின் ஆன்மிக, சமுதாய சேவை மனித நேய பணிகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு இந்த டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.





இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் போரூர் இ. தர்மலிங்கம், தமிழக ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் நல மத்திய சங்கம் மற்றும் அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. மா. மணிகண்ட பிரபு, லா எக்ஸ்போஸர் ஆர்டினன்ஸ் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனத் தலைவர் திரு. சோ.சௌந்தர்ராஜன், தமிழக ஜனநாயக கட்டுமான தொழிலாளா்கள் நல மத்திய சங்க நிர்வாகிகள் கா. செல்வகுமார், எம்.எல். மில்லர், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.









      டாக்டர் பட்டம் பெற்ற சித்தர் அடிகளார் டாக்டர் .ஜி.டி. ரவிச்சந்திரன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்கள் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைந்து ஆன்மிக உலகிற்கும், சமுதாயத்திற்கும் பல்வேறு தொண்டுகள் செய்து பல்லாண்டு வாழ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் அருளும், சர்ப சித்தரின் அருளும் ஆசியும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக