ஞாயிறு, 11 மே, 2014

ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் சித்ரா பவுர்ணமி பூஜை

மாங்காடு ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 
சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை 


                                                     
      சென்னையை அடுத்த மாங்காடு பட்டு அருகே கோவிந்தராஜ் நகரில் சகல தோஷங்களையும் போக்கும் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையும், சிறப்பும் வாய்ந்த இந்த சித்தர் பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேகமும், விஷேச பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியான சித்ரா பவுர்ணமி தினத்தில் மிகச் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு பூஜைகள் நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் வருகின்ற சித்ரா பவுர்ணமி ( 14-5-2014 ) தினத்தில் சித்தருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், விஷேச பூஜைகளும், சிவ பாராயணமும் நடைபெற உள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து பசு தானம் வழங்கப்பட உள்ளது. இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று ஸ்ரீசர்ப சித்தரின் அருளாசி பெற அழைக்கிறோம் என ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகியும், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவருமான சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக