திங்கள், 9 ஜூன், 2014

15-ம் ஆண்டு மகா சித்ரா பவுர்ணமி திருவிழா



சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 15-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழா
விளக்கு பூஜை, சித்தர் வழிபாடு
-----------------------------------
      சென்னையை அடுத்த மாங்காடு (பட்டூர் அருகேயுள்ள) கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தில் 15ம் ஆண்டு மகா சித்ரா பௌர்ணமி திருவிழா மற்றும் சர்ப சித்தர் குரு பூஜை, திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, வண்ண விளக்குகள், மாவிலை தோரணம், வழியெங்கும் வரவேற்பு என விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இதையொட்டி சர்ப சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. மேலும் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  சர்ப சித்தர் துதிப்பாடல், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றிய பேட்டி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை சித்தர் அடிகளார் திருவடி சிவஸ்ரீ G.T. ரவிசந்திரன் மற்றும் சர்ப சித்தர் ஆதி ஜீவ பீட நிர்வாகத்தினர், பக்தர்கள், ஊர் பொது மக்கள், இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழகத்தினர் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

ஸ்ரீசர்ப சித்தர் 

மக்கள் செய்தி இதழில் வந்த செய்தி

அம்மன்

பக்தர்களுடன் சித்தர் அடிகளார் விளக்கேற்றல்



இந்து ஆலய வழிபாடு மக்கள் பாதுகாப்பு கழக போஸ்டர் 

விளக்கு பூஜை

சித்தருடன் சிவஸ்ரீ G.T.ரவிச்சந்திரன் அடிகள்

அன்னதானம்

சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சர்ப சித்தர்
தொடர்புக்கு: மாங்காடு ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், செல் : 9789826263








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக